ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பின் வித்தியாசமான த்ரில்லர் படங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறாராம் செல்வராகவன். ""வித்தியாச...
ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பின் வித்தியாசமான த்ரில்லர் படங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறாராம் செல்வராகவன். ""வித்தியாசமான கதைகளை இயக்குவது எனக்குப் பிடிக்கும். அத்தகைய படங்களைத்தான் இயக்குவேன். அதில் த்ரில்லர் இருக்கும். அதற்காக பேய் படங்களை இயக்க மாட்டேன். பேய் கதைகள் எனக்குப் பிடிக்காது. அதை நாவலில் படிக்கத்தான் நன்றாக இருக்கும். சினிமாவாகப் பார்த்தால் நன்றாக இருக்காது. திரையில் சில பேய் படங்களை பார்த்துள்ளேன். ஆனால் அவற்றை படமாக்கும் எண்ணம் இல்லை''என்கிறார் செல்வராகவன்.
Comments
Post a Comment