Entertainment
›
Cine News
›
Norway Film festival some facts - விழா எடுத்தவர் ஒருவர் - அதை வைத்து பெயர் தட்டிக் கொண்டவர் இன்னொருவர்!
Norway Film festival some facts - விழா எடுத்தவர் ஒருவர் - அதை வைத்து பெயர் தட்டிக் கொண்டவர் இன்னொருவர்!
உதவி செய்ய வருகிறேன் என்று கூறிக் கொண்டு, நாற்காலியைப் பிடுங்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு நிகரான காரியத்தைச் செய்திருக்கிறார் மோசர் பேர்...
உதவி செய்ய வருகிறேன் என்று கூறிக் கொண்டு, நாற்காலியைப் பிடுங்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு நிகரான காரியத்தைச் செய்திருக்கிறார் மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன் என்பதுதான் இன்றைக்கு கோலிவுட்டில் பரபர டாக்.
சமீபத்தில் நார்வேயில் வெற்றிகரமாக நடந்த தமிழ் திரைப்பட விழா பற்றிய செய்திகளைப் படித்திருப்பீர்கள்… இந்த விழாவை தனது விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரும் பணம் செலவு செய்து ஏற்பாடு செய்தவர் வசீகரன் சிவலிங்கம். காதல் கடிதம், காதல் வானம் என அருமையான இசை ஆல்பங்களை இசையமைப்பாளர் விஎஸ் உதயாவுடன் இணைந்து உருவாக்கியவர் இவர். எழுத்தாளர், கவிஞர், குறும்படங்களை உருவாக்கியிருப்பவர்.
தமிழகத்திலிருந்து 13 புதிய திரைப்படங்களை இந்தப் போட்டிக்கென்று வரவழைத்தார். கூடவே தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மிஷ்கின், சசிகுமார், ஜனநாதன், சமுத்திரக்கனி போன்ற முன்னணி இயக்குநர்களையும் வரவழைத்து சிறப்பித்தார். நார்வேயில் உள்ள தமிழ்ச் சமூகத்துக்கு இந்த இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.
நார்வே தமிழ் ஆர்வலர்களின் உபசரிப்பு, நந்தலாலா படத்துக்கு அவர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து அசந்து போன மிஷ்கின், இன்னும் கூட நார்வேயிலேயே இருக்கிறார். அடுத்த படத்தை இங்கே ஷூட் செய்தால் என்ற மனநிலைக்கே வந்துவிட்டாராம் அவர்.
ஆனால் இங்குள்ள தமிழ் மீடியாவோ, நடந்தது என்ன, யார் இந்த விழாவுக்குக் காரணம், விழா எப்படி நடந்தது என்று கூட கேள்வி எழுப்பாமல், மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன் பெயரை பிரதானமாகப் போட்டு, ஏதோ இவர்தான் இந்த விழாவையே ஏற்பாடு செய்த மாதிரி பப்ளிசிட்டி செய்துவிட்டனர்.
தனஞ்செயன் செய்ததெல்லாம், இந்த இயக்குநர்களுடன் விழா குறித்து பேசியது மட்டும்தானாம்.
இந்த திரைவிழா குறித்து தனி பிரஸ்மீட் ஏற்பாடு செய்து செய்திகள் புகைப்படங்களை வழங்கியிருந்தார் வசீகரன். ஆனால் தனஞ்செயனோ, விழா குறித்த புகைப்படங்களை வசீகரனிடம் வாங்கி, அதை இவரே ஏற்பாடு செய்து தந்ததைப் போல அனைத்து நிருபர்களுக்கும் தன் பெயரில் அனுப்பிவிட, பல ஆங்கில தளங்கள், 'Hats off Danajayan!' என்றெல்லாம் இஷ்டத்துக்கும் அடித்துவிட, பல ஆயிரம் யூரோ செலவு செய்து இந்த விழாவை நார்வேயில் நடத்திய வசீகரன் நொந்தே போனார்!
தான் ஒரு தயாரிப்பு நிறுவனப் பொறுப்பாளர்... சினிமா பிஆர்ஓ அல்ல என்பதை தனஞ்செயன் எப்போதுதான் புரிந்து கொள்வாரோ என்று கமெண்ட் அடிக்கிறார் விஷயம் தெரிந்த ஒரு மக்கள் தொடர்பாளர்!
சமீபத்தில் நார்வேயில் வெற்றிகரமாக நடந்த தமிழ் திரைப்பட விழா பற்றிய செய்திகளைப் படித்திருப்பீர்கள்… இந்த விழாவை தனது விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரும் பணம் செலவு செய்து ஏற்பாடு செய்தவர் வசீகரன் சிவலிங்கம். காதல் கடிதம், காதல் வானம் என அருமையான இசை ஆல்பங்களை இசையமைப்பாளர் விஎஸ் உதயாவுடன் இணைந்து உருவாக்கியவர் இவர். எழுத்தாளர், கவிஞர், குறும்படங்களை உருவாக்கியிருப்பவர்.
தமிழகத்திலிருந்து 13 புதிய திரைப்படங்களை இந்தப் போட்டிக்கென்று வரவழைத்தார். கூடவே தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மிஷ்கின், சசிகுமார், ஜனநாதன், சமுத்திரக்கனி போன்ற முன்னணி இயக்குநர்களையும் வரவழைத்து சிறப்பித்தார். நார்வேயில் உள்ள தமிழ்ச் சமூகத்துக்கு இந்த இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.
நார்வே தமிழ் ஆர்வலர்களின் உபசரிப்பு, நந்தலாலா படத்துக்கு அவர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து அசந்து போன மிஷ்கின், இன்னும் கூட நார்வேயிலேயே இருக்கிறார். அடுத்த படத்தை இங்கே ஷூட் செய்தால் என்ற மனநிலைக்கே வந்துவிட்டாராம் அவர்.
ஆனால் இங்குள்ள தமிழ் மீடியாவோ, நடந்தது என்ன, யார் இந்த விழாவுக்குக் காரணம், விழா எப்படி நடந்தது என்று கூட கேள்வி எழுப்பாமல், மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன் பெயரை பிரதானமாகப் போட்டு, ஏதோ இவர்தான் இந்த விழாவையே ஏற்பாடு செய்த மாதிரி பப்ளிசிட்டி செய்துவிட்டனர்.
தனஞ்செயன் செய்ததெல்லாம், இந்த இயக்குநர்களுடன் விழா குறித்து பேசியது மட்டும்தானாம்.
இந்த திரைவிழா குறித்து தனி பிரஸ்மீட் ஏற்பாடு செய்து செய்திகள் புகைப்படங்களை வழங்கியிருந்தார் வசீகரன். ஆனால் தனஞ்செயனோ, விழா குறித்த புகைப்படங்களை வசீகரனிடம் வாங்கி, அதை இவரே ஏற்பாடு செய்து தந்ததைப் போல அனைத்து நிருபர்களுக்கும் தன் பெயரில் அனுப்பிவிட, பல ஆங்கில தளங்கள், 'Hats off Danajayan!' என்றெல்லாம் இஷ்டத்துக்கும் அடித்துவிட, பல ஆயிரம் யூரோ செலவு செய்து இந்த விழாவை நார்வேயில் நடத்திய வசீகரன் நொந்தே போனார்!
தான் ஒரு தயாரிப்பு நிறுவனப் பொறுப்பாளர்... சினிமா பிஆர்ஓ அல்ல என்பதை தனஞ்செயன் எப்போதுதான் புரிந்து கொள்வாரோ என்று கமெண்ட் அடிக்கிறார் விஷயம் தெரிந்த ஒரு மக்கள் தொடர்பாளர்!
Comments
Post a Comment