"அசல்' படத்தின் படப்பிடிப்பை மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முடித்து திரும்பி விட்டார்கள். 90 சதவீத படப்பிட...
"அசல்' படத்தின் படப்பிடிப்பை மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முடித்து திரும்பி விட்டார்கள். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இறுதிக் காட்சி தவிர அஜீத், சமீரா தோன்றும் டூயட் பாடல் ஏவி.எம்.ஸ்டியோவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அஜீத் பேசும் வசனக் காட்சி, சிவாஜிகணேசன் வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புடன் படத்தொகுப்பு பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மற்றுமொரு பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்படுகிறது. இத்துடன் இப்படம் முடிகிறது. பொங்கல் பண்டிகை அல்லது குடியரசு தின நாளில் படத்தை வெளியிடத் திட்டம் இருந்தது. இறுதிக் கட்டப் பணிகள் முடியாததால், பிப்ரவரி முதல் வாரத்தில் "அசல்' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment